Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தல்அடுத்த வருட ஆரம்பத்தில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்அடுத்த வருட ஆரம்பத்தில்!

Share
Share

மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புகின்றோம். தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதனை நோக்கிப் பயணிப்போம்.

ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு நல்லிணக்கம் நோக்கி விரிவான பயணம் தொடரும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...