மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குளம் ஒன்றிலிருந்து மனிதத் தலை மீட்கப்பட்டது.
குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை
என அடையாளம் காணப்பட்டது.
மேலும் அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நபர் காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் முதலைகள் அடிக்கடி வந்து செல்வதாகவும்,
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த நபர் குறித்த இடத்தில் குளிக்கச் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபர் முதலையால் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த உடல் பாகம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Leave a comment