Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

Share
Share

மட்டக்களப்பு, கொக்குவில் – சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியவர் இரவாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் வலியுறுத்து!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

முரண்பாடு, பிளவு அரசுக்குள் இல்லை சஜித்தும் நாமலும் பகல் கனவு காணாதீர்கள் – நளிந்த!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை....

ராஜிதவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று...

இலங்கையில் இருந்து தனியொரு பெண்படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து தனியொரு பெண் நேற்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி...