இளைஞர்களை நீதிமன்றம் அனுப்பாமல் அவர்களுக்கு பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புனர்வாழ்வு அளிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று வழிபட்டபோது மக்களை சந்தித்து
கலந்துரையாடினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘உங்களுக்கு நிறைய பிரச்னை உள்ளது. போதைப்பொருளுக்கு தீர்வு காண பொலிஸ் குழுக்களை நியமிப்போம். அதற்கான சுற்று நிருபம் வந்துள்ளது. சுற்றிவளைப்பு செய்ய வேண்டுமாக இருந்தாலும் செய்வோம்.
‘யாரும் பயப்பட வேண்டியதில்லை. நல்லதொரு பாதுகாப்பான நாட்டுக்காகவே ஒரு வருடத்துக்கு முன்பு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம்’ என்றும் தெரிவித்தார்.
Leave a comment