Home தென்னிலங்கைச் செய்திகள் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குஇலங்கைக்கு ஆஸி. உதவி வழங்க வேண்டும்- அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் சஜித் கோரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குஇலங்கைக்கு ஆஸி. உதவி வழங்க வேண்டும்- அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் சஜித் கோரிக்கை!

Share
Share

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை – உதவியை ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இதன்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.  

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வின்போதே மேற்படி இருவரும் இவ்வாறு சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டார்.

இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள்...

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத்...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு...

யானை தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் படுகாயம்!

யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான்...