Home தென்னிலங்கைச் செய்திகள் பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்க தொலைபேசிகள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்க தொலைபேசிகள் மீட்பு!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று (09) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 29 மொபைல்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சிறைச்சாலை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, முன்னணி பாதாள உலகக் கும்பல் குற்றவாளிகளான ‘தெமட்டகொட சமிந்த’, ‘வெலே சுதா’ மற்றும் ‘மிடிகம ருவான்’ உள்ளிட்ட பல கைதிகளிடமிருந்து இந்த சாதனங்கள் மீட்கப்பட்டன.

சோதனையின் போது, மெபைல்களுக்கு மேலதிமகமாக சிறைச்சாலை அதிகாரிகள் 30 சிம் கார்டுகள், 35 மின்னேற்றிகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கடத்தப்பட்ட பொருட்கள் எவ்வாறு கடத்தப்பட்டன என்பதைக் கண்டறிய அதிகாரிகள் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...