புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்து 14 வயது சிறுமியை
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்துக்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை
தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று
முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை
கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Leave a comment