Home ஒளிப்படங்கள் புதைகுழி பகுதியில் ஸ்கான் பணி! மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் பார்வையிட்டனர்!
ஒளிப்படங்கள்முதன்மைச் செய்திகள்

புதைகுழி பகுதியில் ஸ்கான் பணி! மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் பார்வையிட்டனர்!

Share
Share

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் ஜி.பி.ஆர். ஸ்கான் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கேனர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி , இன்றைய தினம் குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை,

சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்களும், சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்திற்கு சென்று பார்வையிட்டதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் குறிப்பிட்டார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சித்துப்பாத்தி வளாகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று 31 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனிதப் புதைகுழிகள்: சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிப்பதற்கு நான் தயார் – சோமரத்ன ராஜபக்ஷ!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று...

மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!

அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகள் இன்று திங்கட்கிழமைஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து...

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து...