Home தாயகச் செய்திகள் புதுக்குடியிருப்பில் விபத்து!குடும்பஸ்தர் ஒருவர் பலி! இளைஞர்கள் இருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பில் விபத்து!குடும்பஸ்தர் ஒருவர் பலி! இளைஞர்கள் இருவர் படுகாயம்!

Share
Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்தது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடை!

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை...

வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை...

யாழ். சிறைக் காவலாளியின் வீட்டின் மீதுஅதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்...

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!

வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம்...