Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!

Share
Share

இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்துப் பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்துப் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரைப் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிந்துரைத்து அரசமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.

இந்தநிலையிலேயே பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

பட்டதாரிகளில் 50 வீதத்துக்கும் அதிமானோர் நாட்டைவிட்டு வெளியேறி நாடு திரும்புவதில்லை!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி,...

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த...

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின்யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமனம்!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்றொழில்...