Home தாயகச் செய்திகள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதில் தாமதம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதில் தாமதம்!

Share
Share

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கடந்த செப்டெம்பர் மாதத்தில் புதிய சட்டமூலத்துக்கான முன்மொழிவுகளை நிறைவு செய்வதாக அறிவித்திருந்தது.

எனினும், குறித்த குழு, இன்னும் தமது பணிகளை நிறைவுறுத்தவில்லை என நீதி அமைச்சு தரப்புகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, குறித்த முன்மொழிவை விரைவில் வெளிக்கொணரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை என்பன அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அரசாங்கமும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறைவுறுத்த போவதாகவும் அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்மொழிய உள்ளதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...