Home தாயகச் செய்திகள் பிள்ளையான் தலைமையில் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஆறு பேர் கைதாகின்றனர்?
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிள்ளையான் தலைமையில் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஆறு பேர் கைதாகின்றனர்?

Share
Share

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் துப்பாக்கிதாரிகள் ஆறு பேரைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஓமந்தையில் விபத்து! பெண் உட்பட்ட இருவர் மரணம்! 12 பேர் படுகாயம்!

வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 12...

கடையடைப்புக்கு ஆதரவில்லை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடையடைப்புக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன்...

குமணனை 7 மணிநேரம்இன்று துருவியது ரி.ஐ.டி.!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப்...

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்! – பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை...