Home தாயகச் செய்திகள் பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

Share
Share

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்
என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

‘தொழில் பயிற்சி மிகவும் முக்கியமானது. தனியார்த் துறையில் பல வேலைவாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. எதிர்காலத்தில் தொழிற் சாலைகள் ஆரம்பிக்கப்படும் போது நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது. அப்போது பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்பு ஏற்படும்.

மேலும், பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர். இந்த நிகழ்வில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளன. இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவத்தை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், கிளிநொச்சியில் இயங்கும் தொழில் நுட்பக் கல்லூரிக்கு தென்பகுதியிலிருந்து கற்க மாணவர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு அப் பயிற்சி நெறியின் முக்கியத்துவம் விளங்குகிறது.

தேசியபயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்கள் தமது சொந்த முயற்சியிலும் முன்னேற வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...