Home தாயகச் செய்திகள் படை விட்டோடிகள் 3,500 பேர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

படை விட்டோடிகள் 3,500 பேர் கைது!

Share
Share

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500 இற்கும் மேற்பட்ட
ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 03 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில்,
சேவையிலிருந்து தப்பியோடிய முப்படையினர் 3,504 பேர், கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தினர் 2 937 பேர்.

மேலும்,

கடற்படையினர் 289 பேர், விமானப்படையினர் 278 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படைகளில் இருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாத படையினர் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் அந்தக் காலகட்டத்தில் சரணடையாதவர்களைக் கைது செய்வதற்கான
நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான...

செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் – இதுவரை 147 அடையாளம்; இன்றுடன் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித...

சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல்...