Home தாயகச் செய்திகள் பகிடிவதை; கிழக்குப் பல்கலையில் மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பகிடிவதை; கிழக்குப் பல்கலையில் மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேர் கைது!

Share
Share

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளனர் என்றும் அதில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மாணவர்கள் 09 பேர் மாணவிகள் 07 பேர் உட்பட்ட 16 பேரை நேற்று புதன்கிழமை (03) மாலை சிஐடியினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் 3 ம் ஆண்டில் தொழில்நுபட்ப பீடத்தில் கல்விகற்றுவரும் மாணவ குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் மாணவிகள் மீது கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை மேற்கொண்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பகிடிவதையால் பாதிக்கப்பட்ட ஹிம்புட்டான அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன்மீது கொடூரமாக தாக்கப்பட்டு பகிடிவதை மேற்கொண்டதாகவும் ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும் 3ம் ஆண்டு மாணவர்குழுவுக்கு எதிராக 26.10.2024 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டையடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் குழு ஒன்று சம்பவதினமான நேற்று காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு மாணவர்கள் 16 பேரையும் அழைத்து அங்கு வைத்து விசார ணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்ற பின்னர் மாலை 4.45 மணிக்கு 1998 ஆம் ஆண்டு 20 ஆம் எண் கல்வி நிறுவனங்களில் சோதனை மற்றும் பிற வகையான வன்முறைகள் (தடை) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் மாணவர்கள் 09 பேர், மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள...

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறுமாம் – இப்படி பிரதி அமைச்சர் உறுதி!

“மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின் கீழ் அந்தத் தேர்தல் நடத்தப்படும்.” இவ்வாறு...

சிறுவர்களை பணிக்கமர்த்தல்; தண்டனை அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

1956 ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பெண்கள், இளைஞர்கள் மற்றும் 16வயதுக்குக் குறைந்த...

மஹிந்தவின் இல்லம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது?

கொழும்பு, விஜேராம வீதியில், தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை,...