Home தாயகச் செய்திகள் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில்  நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக ஐந்து மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 30ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. 

நேற்றைய அகழ்வின் போது ஐந்து மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆறு மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் 135 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளில் இருந்து 126 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை வருகின்றார் ஆஸி. ஆளுநர் நாயகம் – ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பார்!

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்...

சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை...

அமெரிக்க வாகனங்களை வரி இல்லாது இறக்குமதி செய்யுமா இலங்கை?

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் தமது மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத...