Home தென்னிலங்கைச் செய்திகள் நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலை!

Share
Share

பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதில், இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்காக வெளிநாட்டவர்களை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் நாட்டிற்கு வரவழைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

கெஹெல்பத்தர பத்மேவினால் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குறித்த போதைப்பொருள் தொழிற்சாலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலைக்கு 40 இலட்சம் ரூபாய் பணத்தை முதலிட்டுள்ளமையை கெஹெல்பத்தர பத்மே ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நுவரெலியாவில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாயிரம் கிலோகிராமிற்கும் அதிக இரசாயனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...