Home தாயகச் செய்திகள் நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் வாள்வெட்டு! ஐவருக்கு விளக்கமறியல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் வாள்வெட்டு! ஐவருக்கு விளக்கமறியல்!

Share
Share

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு அண்மையாக வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு நல்லூர் ஆலயம் அருகே நின்றிருந்த நால்வர் மீது
வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், இருவர் சிகிச்சைக் காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலை நடத்தினர் என்று சந்தேகிக்கப்படும் ஐவரையும் ஆலயத்தின் அருகே கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் நேற் றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டனர்.

அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர், ஐவரை யும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...