Home தாயகச் செய்திகள் தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

Share
Share

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் – எதிர்காலத்தில்
விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார மேற்பார்வை குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் கூட்டம் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் நடந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், யாழ். மருத்துவ பீடாதிபதி குழுவினர் கலந்து கொண்டு, மருத்துவமனையின் தற்போதைய நிலைமை மற்றும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கினர்.

ஆளணி பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்குத் தீர்வாக, எதிர்வரும் காலங்களில் தேவையான சுகாதார ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வைக் குழு உறுதி அளித்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை நான்காவது தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும் இதன்போது தீர்மானமும்
எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...