Home தாயகச் செய்திகள் தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தாவடியில் கொலை; சந்தேக நபர் கைது!

Share
Share

தாவடியில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே தர்க்கம் ஒன்றில் இருவர் ஈடு பட்டனர். இதன்போது, மதுபோதையில் இருந்தவர் மற்றவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் யாழ். போதனா மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மானிப்பாயைச் சேர்ந்த நே. சர்வேந்திரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

அத்துடன், அவரிடம் விசாரணைகள் மேற் கொண்டு வருகின்றனர்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...