Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழ் அரசியல் கைதிகள் 15 பேர் ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் 15 பேர் ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரிக்கை!

Share
Share

தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது விடயத்தில் என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கிறேன் – இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் சிறீதரன் எம்.பி நிலையியல் கட்டளை சட்டத்தின் பிரகாரம் முன்வைத்த கேள்விக்கு நேற்று வியாழக்கிழமை பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

04 சந்தேகநபர்கள், 08 தண்டனை பெற்ற கைதிகள் இதில் அடங்குவர்.

மேலும், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் இவர்களில் இருவர் மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மகசின்,
மஹர, தும்பர, பூஸா, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால்
தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனை காலம் நிறைவடைந்த
பின்னர் விடுதலையாவார்கள்.

அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள்
அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம். சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பு தொடர்பில்
கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இந்த விடயத்தில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் வழங்க முடியாது.

ஏனெனில், அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும்.

சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...