Home ஒளிப்படங்கள் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு!
ஒளிப்படங்கள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு!

Share
Share

நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனவீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறை வாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள விடுதலை விருட்சத்துக்கான விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.

இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குச் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது.

இன்று ஆரம்பமான இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் நாளையும் தொடரவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனிதப் புதைகுழி; எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக...

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...