இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க.செல்வராஜா (சுப்ரா) , கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்



Leave a comment