Home தென்னிலங்கைச் செய்திகள் செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

Share
Share

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான ஒத்துழைப்புகளே வழங்கப்பட்டு வருகின்றன.” – என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நீதிமன்றக் கண்காணிப்புடன் இடம்பெற்று வருகின்றன. தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாக்குகள் உள்ளன. நிச்சயம் நாம் நீதியை நிலைநாட்டுவோம்.

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எப்படியாவது மீள ஏற்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் முற்படுகின்றனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நாம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கூட ஒத்துழைப்பு கோரியுள்ளோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசபந்துவைப் பதவி நீக்குகின்றகடிதத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒப்புதல்...

செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் – இதுவரை 147 அடையாளம்; இன்றுடன் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித...

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் சபையில்96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று...