களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவை பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Leave a comment