Home தாயகச் செய்திகள் சுயாதீன ஊடகவியலாளர் குமணன் ரி.ஐ.டியால் விசாரணைக்கு அழைப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுயாதீன ஊடகவியலாளர் குமணன் ரி.ஐ.டியால் விசாரணைக்கு அழைப்பு!

Share
Share

சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

சுயாதீன ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளைத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று வெளியிட்டு வருபவர். இந்நிலையில், அவரைப் பயங்கரவாதத்  தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் குமணனுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...