Home தாயகச் செய்திகள் சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!

Share
Share

சிறைச்சாலைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்று வட்டத்தில், எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில், இந்தநினைவேந்தல் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், பல ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டனர்.

அவர்களில் பலர், சிறைச்சாலைகளிலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் இன்று வரையில் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

எனவே, இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாக, சிறைச்சாலைகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதேநேரம், இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்த உள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

சுண்டிக்குளத்தில் இரகசியமான முறையில் காணி அளவீடு!

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால்...

மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி சிறார்கள் மூவர் பலி!

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.  கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த...