Home தாயகச் செய்திகள் சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்; ஜூலை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குக – சட்ட வைத்திய அதிகாரிக்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிபதி உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்; ஜூலை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குக – சட்ட வைத்திய அதிகாரிக்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிபதி உத்தரவு!

Share
Share

திருகோணமலை மாவட்டம், மூதூர், சம்பூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பெளசான் உத்தரவிட்டுள்ளார்.

அந்தப் பகுதிக்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி, அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு அந்த இடத்தில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் அந்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அந்த இடத்துக்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல்போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்று வருகை தந்திருந்தனர்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரபி பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டையோடு மற்றும் எலும்புப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதையடுத்து மூதூர் பதில் நீதிவானின் உத்தரவுக்கலாமிய அகழ்வுப் பணிகள் இன்று வரை இடைநிறுத்தப்பட்டிருந்தன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...