Home தாயகச் செய்திகள் சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்; ஜூலை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குக – சட்ட வைத்திய அதிகாரிக்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிபதி உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்; ஜூலை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குக – சட்ட வைத்திய அதிகாரிக்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிபதி உத்தரவு!

Share
Share

திருகோணமலை மாவட்டம், மூதூர், சம்பூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்துக்கும் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பெளசான் உத்தரவிட்டுள்ளார்.

அந்தப் பகுதிக்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி, அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு அந்த இடத்தில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் அந்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அந்த இடத்துக்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல்போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்று வருகை தந்திருந்தனர்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரபி பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டையோடு மற்றும் எலும்புப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதையடுத்து மூதூர் பதில் நீதிவானின் உத்தரவுக்கலாமிய அகழ்வுப் பணிகள் இன்று வரை இடைநிறுத்தப்பட்டிருந்தன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மேலும் 03 எலும்புத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு!

நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல்...

வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு...

ஏறாவூரில் அதிகாலை விபத்து! இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் – மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்....