Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!

Share
Share

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா (USS Santa Barbara) என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படையின் இந்த கப்பல் இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்துக்கு வந்த நிலையில், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி அதனை வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா, அமெரிக்காவின் 7வது கடற்படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு கப்பலாகும்.

இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியின் போது, அதன் அங்கத்தவ குழுவினர்கள் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...