Home தென்னிலங்கைச் செய்திகள் கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

Share
Share

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் உறுப்புரை 43(1) இன் படி அமைச்சரவை, கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு பதிலை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும், அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தை வெளியிட்டார்.

இந்த விடயத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு மீறப்பட்டுள்ளது.” – எனத் தெரிவித்துள்ளார். 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் வலியுறுத்து!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

முரண்பாடு, பிளவு அரசுக்குள் இல்லை சஜித்தும் நாமலும் பகல் கனவு காணாதீர்கள் – நளிந்த!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை....

ராஜிதவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று...

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!

இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க...