Home தாயகச் செய்திகள் குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!

Share
Share

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேச குடிமனைப் பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குக் கூட்டம்  பெண்கள் மீது கடித்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குரங்குகளின் அட்டகாசத்தால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளன. பயன்தரும் மரங்களும், பயிர்களும் அழிவடைந்துள்ளன.

மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பயப் பீதியில் இருக்கின்றார்கள்.

வந்தாறுமூலை, பேக்வீதியில் நேற்று வீட்டைவிட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார். அவரின் காலில் பாரிய தசைப் பகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் குரங்குகடிக்கு உள்ளாகிக் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...