யாழ். கீரிமலைப் பகுதியில் இருந்து நேற்றையதினம் புதன்கிழமை வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் தெல்லிப்பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.
Leave a comment