Home தாயகச் செய்திகள் காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!

Share
Share

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால்
கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையம், இராசபாதையில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை கைப்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.

தமது காணிகள், வீடுகளில் இருந்து பொலிஸாரை வெளியேற்றி அவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ்.மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 07 உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள், வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், பொலிஸார் காணிகள், வீடுகளை ஒப்படைக்காத நிலையில் நேற்று புதன்கிழமை நீதிமன்றப் பதிவாளரின் முன்னிலையில் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உரிமையாளர்களிடம் காணிகள்,
வீடுகள் கையளிக்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமது காணிகள், வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்கள் தற்போது சொந்த காணிகள், வீடுகள் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி
அடைந்தனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...