Home தாயகச் செய்திகள் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுரை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் தாயகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுரை!

Share
Share

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுருவப் படத்துக்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மேலும் 03 எலும்புத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு!

நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல்...

வன்னியில் தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு...

ஏறாவூரில் அதிகாலை விபத்து! இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் – மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்....