Home தாயகச் செய்திகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின்யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமனம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின்யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமனம்!

Share
Share

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக இருந்த ஜே.சுதாகரன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய மோகன் கிளிநொச்சி மாவட்டத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகிலன் அண்மையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் நடத்திய உதவிப் பணிப்பாளர்களுக்கான தேர்வில் சித்தியடைந்த இரு தமிழ் அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன்,...

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு...