Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.நாவின் புதிய பிரேரணை: அரசின் நிலைப்பாடு என்ன?
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நாவின் புதிய பிரேரணை: அரசின் நிலைப்பாடு என்ன?

Share
Share

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாவுக் கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஆண்டுகளில் எமது நாட்டில் காணப்பட்ட ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிலைமை தற்போது கணிசமானளவு மாற்றமடைந்துள்ளது என்று சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் அந்த அடிப்படையிலேயே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று அவர்கள் தரப்பில் சில கண்காணிப்புக்களும் காணப்படுகின்றன. அரசும், வெளிவிவகார அமைச்சும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடையில் இது தொடர்பில் அரசு அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...

இலங்கைக்கு கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள்...

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் – கூட்டத் தொடரில் விஜித ஹேரத் தெரிவிப்பு!

“இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கின்றோம். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும்...