Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார் அநுர – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார் அநுர – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

Share
Share

“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு ஏற்புடையது அல்ல எனவும், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.

எனினும், தற்போது ஒப்பந்தத்தை மாற்ற முடியாது , அவ்வாறு செய்தால் அது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும், நடைமுறையில் இருந்த ஒப்பந்தமே முன்னெடுத்து செல்லப்படும் எனவும் ஜனாதிபதி கூறி வருகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால் 4 ஆம் கட்ட கடன் தவணை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது விடுவிக்கப்பட்டுள்ளது. திடீரென இது எப்படி சாத்தியமானது? எரிபொருள் விலையேற்றம், மின் கட்டணம் அதிகரிப்பு போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்தால்தான் கடன் கிடைக்கப்பெற்றுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை...