Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார் அநுர – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார் அநுர – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

Share
Share

“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றி வருகின்றார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் நாட்டுக்கு ஏற்புடையது அல்ல எனவும், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.

எனினும், தற்போது ஒப்பந்தத்தை மாற்ற முடியாது , அவ்வாறு செய்தால் அது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும், நடைமுறையில் இருந்த ஒப்பந்தமே முன்னெடுத்து செல்லப்படும் எனவும் ஜனாதிபதி கூறி வருகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால் 4 ஆம் கட்ட கடன் தவணை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது விடுவிக்கப்பட்டுள்ளது. திடீரென இது எப்படி சாத்தியமானது? எரிபொருள் விலையேற்றம், மின் கட்டணம் அதிகரிப்பு போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்தால்தான் கடன் கிடைக்கப்பெற்றுள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...