Home தாயகச் செய்திகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

Share
Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருந்தார்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...