Home தாயகச் செய்திகள் எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!

Share
Share

யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை, சோதனையிட்டபோது, அதிலிருந்து சுமார் 38 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

எழுவைதீவு பகுதியில் கடற்படை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால், கடத்தல்காரர்கள் இந்த போதைப்பொருளைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, ஊர்காவற்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...