Home தென்னிலங்கைச் செய்திகள் எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!

Share
Share

எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால், அதிலிருந்தவர்கள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு புதர்களுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காயமடைந்தவர்களை மீட்க காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட ஏராளமான பொது மக்கள் பணியாற்றி வருகின்றனர். 

தங்காலையில் இருந்து எல்லவுக்குச் சுற்றுலாவிற்கு வந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று, தங்காலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...