இலங்கை இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி பருத்தித்துறையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி ஊடக இல்லத்தின் செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் இராமச்சந்திரன்
கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தவத்திருவேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகர பிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகர பிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப
தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள்குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் பங்கேற்றனர்.
Leave a comment