Home தாயகச் செய்திகள் உதைப்பந்தாட்டக் கோல் கம்பம் வீழ்ந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணம் – நாவாந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் துயரம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உதைப்பந்தாட்டக் கோல் கம்பம் வீழ்ந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணம் – நாவாந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் துயரம்!

Share
Share

யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்ற 29 வயது இளைஞரே இந்தச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் இன்று 07 எலும்புக்கூடுகள் அடையாளம்! இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன....

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் சாவு!

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் –...

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப்...

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...