Home தென்னிலங்கைச் செய்திகள் உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் – நாமல் எம்.பிக்கு பிரதி அமைச்சர் ஜயசிங்ஹ பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் – நாமல் எம்.பிக்கு பிரதி அமைச்சர் ஜயசிங்ஹ பதில்!

Share
Share

“உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.” – இவ்வாறு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, நாமல் ராஜபக்ஷ எம்.பியை எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ உரையாற்றிக்கொண்டிருந்தபோது இராதாகிருஷ்ணன் எம்.பி ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். ஆனால், அதனைப்  பெரிதாகச் செவிமடுக்காத தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “எதிராளிகளாக இருந்த சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர நீங்கள் எல்லோரும் கொழும்பு மாநகர சபை ஆட்சியைக் கைப்பற்ற ஒன்றிணைந்தீர்கள். ஊடக சந்திப்புகளை நடத்தினீர்கள். எதிர்கால நண்பர்களானீர்கள்.” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி., “ஏன் நீங்களும் எமது நண்பர்தானே.” – என்றார்.

இதனால் கோபமடைந்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, “நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொலை செய்தீர்கள். படுகொலையாளிகளை, வெள்ளை வான் கடத்தல்காரர்களைப்  பாதுகாத்தீர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே, எம்மிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம்.” – என்று பதிலடி வழங்கினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போக வேண்டிய இடத்துக்கு உங்களை அனுப்பிவைப்போம் – தயாராக இருங்கள் என்று நாடாளுமன்றில் அநுர அரசை எச்சரித்த நாமல்!

“ஆட்சிக்கு வரும்போது எங்களைத் தயாராக இருக்குமாறு கூறினீர்கள். இப்போது நீங்களும் தயாராக இருங்கள். போகும் இடத்தைக்...

விமான சேவைகளில் மோசடி; விசாரிக்க விசேட குழு நியமனம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்)...

ரணில் ஆட்சிக் கால அவசரகால தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் விதிக்கப்பட்ட அவசரகால தடைச்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் இன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை 1983 படுகொலையின் 42...