Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கை வருகின்றார் ஆஸி. ஆளுநர் நாயகம் – ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பார்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கை வருகின்றார் ஆஸி. ஆளுநர் நாயகம் – ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பார்!

Share
Share

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை புதன்கிழமை வருகை தரும் சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஆதரவுடன் இயங்கும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

அத்துடன், இந்த விஜயம் இலங்கை – ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை...

புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளா? – நாமல் எம்.பி. கடும் கொதிப்பு!

“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப்  பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யாதீர் – எஸ்.பி. வலியுறுத்து!

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம்...