Home தென்னிலங்கைச் செய்திகள் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!

Share
Share

கேகாலையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...