கேகாலையில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment