ஆறு பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 6 பேரும், 2015 ஆம் ஆண்டில் இரண்டு நபர்களைத் தாக்கி, பின்னர் அவர்களை வாகனம் ஒன்றினால் மோதி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அம்பாறை மேல் நீதிமன்றம், குறித்த 6 நபர்களும் கொலைக் குற்றவாளிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த தீர்ப்பை அறிவித்தது.
Leave a comment