Home தென்னிலங்கைச் செய்திகள் இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

Share
Share

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை (11) வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், விபத்து தடுப்பு தொடர்பான மத்திய நிலையத்தின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு, ஜூலை மாதம் வரும் முதலாம் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தேசிய விபத்து தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அந்தவகையில் 10வது முறையாக இத்திட்டம், இம்மாதம் 7 முதல் 11 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாரத்தை செயல்படுத்த தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், விபத்துக்களை சந்திக்க வாய்ப்புள்ள இடங்களையும், நமது அன்றாட வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவிடும் இடங்களையும் கருத்தில் கொண்டு ஐந்து நாள் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக விபத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான விபத்துகள் நிகழ்வதுடன், இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான விபத்துகள் எமது கவனயீனம் காரணமாகவே நிகழ்கிறது.

ஆகையால் அவை தொடர்பில் அவதானம் செலுத்தும் பட்சத்தில் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளலாம். இலங்கையில் 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறான விபத்துகளால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வருடாந்தம் நாட்டில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் 8 சதவீதமானோர் அதாவது 10 ஆயிரம் – 12 ஆயிரம் பேர் விபத்துக்களால் மரணிப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாதாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துச் சம்பவங்கள் பதிவாவதுடன் அண்ணளவாக 30 பேர் உயிரிழக்கின்றனர்.

குறிப்பாக 7 500 – 8000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழக்கின்றனர். அத்தோடு ஆண்டுதோரும் 3 ஆயிரம் உயிர்மாய்ப்பு சம்பவங்களும் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

தமிழரசின் பெருந்தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடரால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குப் பாதிப்பாக அமையாது...