Home தென்னிலங்கைச் செய்திகள் இந்த வருடம் இதுவரை 73 துப்பாக்கிச்சூடுகள் – 38 பேர் சாவு; 43 பேர் காயம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்த வருடம் இதுவரை 73 துப்பாக்கிச்சூடுகள் – 38 பேர் சாவு; 43 பேர் காயம்!

Share
Share

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் 73 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளன.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு உதவி செய்த குற்றத்துக்காக 150 பேரும், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய குற்றத்துக்காக 15 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...