Home தாயகச் செய்திகள் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் கனடாவில் வெளியாகியது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “முட்காட்டுப் பூ” நாவல் கனடாவில் வெளியாகியது!

Share
Share

படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “ முட்காட்டுப் பூ” நாவல் வெளியீட்டு நிகழ்வு 07. 07. 2025 அன்று கனடாவில் நடைபெற்றது.

நிகழ்விற்கான ஆதரவினை கனேடியத் தமிழ்வானொலி மேற்கொண்டிருந்தது.

சுடரேற்றலை தொடர்ந்து கனேடிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தை கரிசா துஷ்யந்தன், பவிசா துஸ்யந்தன் சகோதரிகள் இசைத்தனர். அடுத்து தலைமையுரை இடம்பெற்றது.

அறிமுக உரையை ஊடகவியலாளர்திருமதி சிவவதனி பிரபாகரன் நிகழ்த் , நாவலின் வெளியீட்டுரையை திருமதி.கலாநிதி குலமோகன் ஆசிரியை ஆற்றினார்.

மதிப்பீட்டுரையை ஊடகவியலாளர் திருமதி சக்தி சபாரட்ணம் நிகழ்த்தினார். ஆய்வுரைகளை தமிழ் ஆசிரியை திருமதி வனிதா இராஜேந்திரம், ஊடகவியலாளரும் ஆசிரியருமான கஜரூபன் குகதாசன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

முட்காட்டுப் பூவை நூலாசிரியர் வெளியிட்டு வைக்க முதற் சுவடியை செயற்பாட்டாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு பிரதிகளை அனுசரணையாளர் விக்கி சீவரத்தினம் பெற்றுக்கொள்ள தொடர்ந்து கனடா தமிழ் கல்லூரி சார்பாக மனோகரி தயானந்தன், இளையோர் அமைப்பு சார்பாக யோகித்தா பிரதீபன், அயுசன் தவசீலனும், கனேடியத்தமிழ் வானொலி சார்பாக அழகனும் பெற்றுக்கொண்டனர்.

இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் பால்யநண்பர்கள், ஊரவர்கள் உறவினரகள் நூலைப் பெற்றுக்கொண்டார்கள்.

நன்றியுரையையும் ஏற்புரையையும் நூலாசிரியர் வழங்கினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தையிட்டியில் போராட்டம்!

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்...

நவாலியில் 147 பேர் படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு 30 வீதம் வரி அறிவித்தார் ட்ரம்ப்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்! – ஆடைகள், பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...