Home தாயகச் செய்திகள் ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவரப்பட நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவரப்பட நடவடிக்கை!

Share
Share

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்
தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர்-இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில்,
எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக பாராளுமன்ற
சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருப்பதை விமர்சித்தார்.

‘ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் அதிகாரபூர்வ வழிகள் மூலம் பணியாற்றிவரும் நிலையில், இந்த சிறியகுழு சென்று அருண ஜயசே கரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்கிறது.

சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தவுடன், அதை நாங்கள் பகிரங்கப்படுத்து வோம் – அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால் நான் சொல்ல வேண்டும், அரசியலை இவ்வளவு கீழ் மட்டத்துக்கு இழுக்கக்கூடாது.

நேர்மையாகச் சொன்னால், எதிர்க்கட்சி இன்னும் இவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன்
செயல்படுவதால் நாங்கள் கலக்கமடைகிறோம், ‘என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் போதும் அதற்குப் பின்னரும் ஆட்சியில் இருந்த ரணில்
விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் அப்போது அருண ஜயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.

‘கடந்த 06 ஆண்டுகளில், அருண ஜயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது இரண்டு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில். நாங்கள் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவை மீண்டும் பணியில் அமர்த்திய பிறகு, அசாத் மௌலானாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை
சமர்ப்பிக்கிறது,’ என்று அவர்கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு அருண ஜயசேகரவுக்கு எதிராக விசாரணை நடத்தத் தவறியதற்காக சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க மீது இப்போது விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமைச்சர் ரத்நாயக்க கூறினார்

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வள்ளிபுனத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப் படையின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு...

செம்மணிப் புதைகுழி அகழ்வில் வெளிநாட்டு நிபுணத்துவ சேவை; யாழ்ப்பாணம் நீதிமன்றம் பரிசீலனை!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை மரபணு ரீதியாக அடையாளம் காணும் பணிக்கு...

இந்தியக் கடற்பரப்பில் இலங்கையர் இருவர் கைது – யாழ். மாவட்டப் பதிவு இலக்கம் கொண்ட படகும் சிக்கியது!

இந்தியக் கடற்பகுதியில் நின்ற படகில் இருந்த இரண்டு இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்...